கண்ணாடிச் சில்லுகள்

என்னிடம் மிச்சமிருக்கும்
உன் நினைவுகள்,
காற்றில் கலந்துவிட்ட
கண்ணாடிச் சில்லுகள்.
மனதை எல்லா திசைகளிலுமிருந்து
குத்திக்கிழிக்கின்றன.
உன் வார்த்தைகள்,
அடர்ந்த காட்டில்
காற்றின் ஜதிக்கு அசையும்
சருகுகளாய்.
என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
ஆனால், நீ மட்டும்
எத்தனை முயற்சி செய்தும்
காண முடியாதவளாகிவிட்டாய்.
தவறு என்மீதா ? இல்லை உன்மீதா ?
என்ற உண்மை சொல்லாமல்.

Comments